இனிமேல் மேனேஜர் எல்லாம் கிடையாது: நேரடியாக களத்தில் இறங்கிய யோகிபாபு!


Send us your feedback to audioarticles@vaarta.com


இனிமேல் தனக்கு மேனேஜர் கிடையாது என்றும் தன்னுடைய படங்கள் குறித்த பேச்சு வார்த்தைக்கு தன்னிடம் நேரடியாக அணுகலாம் என்றும் நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர்கள் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் யோகிபாபுவின் கால்ஷீட் உள்பட அவரது பட சம்பந்தமான பணிகளை சசி என்ற மேனேஜர் இதுவரை கவனித்து வந்தார் என்பதும் இந்த நிலையில் தற்போது மேனேஜர் சசி தனது குடும்ப சூழல் காரணமாக தன்னை விட்டு விலகி உள்ளதாகவும் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
மேலும் இனிவரும் காலங்களில் தன்னுடைய பட கால்ஷீட் மற்றும் எந்த விஷயமாக இருந்தாலும் தன்னை நேரடியாகவே அணுகலாம் என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்னுடைய கால்ஷீட் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இனி யோகிபாபு நேரடியாகவே கவனிக்க உள்ளார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments