close
Choose your channels

முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்த தமிழ் நடிகைக்கு அபராதம்: சுகாதாரத் துறை அதிரடி 

Saturday, October 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதார துறை வரை அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முக கவசம் அணியாமல் காரில் பயணம் செய்த தமிழ் நடிகை ஒருவருக்கு ரூபாய் 200 அபராதம் விதித்து சுகாதாரத் துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

’அருவி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இவர் தற்போது இரண்டு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கொடைக்கானலுக்கு முகக்கவசம் இல்லாமல் காரில் பயணம் செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அருவி பட நாயகி அதிதி பாலனுக்கு ரூ.200 அபராதம் விதித்து சுகாதாரத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இனிமேல் முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது என்று அவருக்கு அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.