close
Choose your channels

பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார்களோ என பயந்தேன்: முகமூடி கொள்ளையர்கள் குறித்து பிரபல நடிகை!

Thursday, September 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவரிடம் முகமூடி கொள்ளையர்கள் ரூபாய் 7 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ என பயந்தேன் என அந்த நடிகை பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு நடிகை நிகிதா ராவல். இவர் டெல்லியில் உள்ள தனது சித்தி வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு கார் அவருடைய காரை வழிமறித்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 முகமூடி அணிந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் இதனை அடுத்து அவரிடமிருந்து மோதிரம், நகைகள், ரொக்கம் உள்ளிட்ட ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை நிகிதா ராவல், அந்த பத்து நிமிடங்களில் நான் சந்தித்ததை என்னால் மறக்கவே முடியாது. கொள்ளையர்கள் என்னிடம் கொள்ளையடிப்பது மட்டுமன்று என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவார்களோ என்று மிகவும் பயந்தேன். அதன் பிறகு அவர்களிடம் பணத்தை மட்டும் இழந்து விட்டு வேகமாக வந்து எனது வீட்டிற்குள் சென்று கதவை மூடிக் கொண்டேன்.

அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் எனக்கு திகிலாக உள்ளது. டெல்லியில் இனி இருப்பது பாதுகாப்பு இல்லை என்பதால் மும்பைக்கு வந்து விட்டேன். இன்னும் ஒரு சில நாட்களில் நான் மீண்டும் டெல்லி சென்று இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க உள்ளேன் என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நிகிதா ஏற்கனவே ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ்குந்த்ரா குறித்து பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.