close
Choose your channels

25 வருடம் செக்யூரிட்டி வேலை பார்த்த கே.பாலசந்தர் நாயகி

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரமிளா. அதன் பின்னர் பல படங்களில் குணசித்திர, வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்த பிரமிளா, ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் திரையுலகை விட்டு விலகினார்.

திருமணத்திற்கு பின்னர் அமெரிக்கா சென்ற பிரமிளா அங்கு செக்யூரிட்டி பணிக்கான தேர்வு எழுதி முறையாக பயிற்சி பெற்று தேர்வானார். அமெரிக்காவின் டாலர் அச்சடிக்கும் சென்ட்ரல் வங்கியில் இருந்து டாலர் நோட்டுக்களை ஏற்றிச்செல்லும் டிரக் வண்டியின் செக்யூரிட்டியாக சுமார் 25 வருடங்கள் பிரமிளா பணிபுரிந்துள்ளார்.

கைநிறைய சம்பளம், அன்பான கணவர் என அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்ட பிரமிளா தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் ஓய்வுக்கு பின்னர் விவசாயம், வேட்டை ஆகியவற்றில் கவனம் செலுத்தி அன்பான கணவருடன் சேர்ந்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருவதாகவும் பேட்டி ஒன்றில் பிரமிளா கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.