close
Choose your channels

சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம்: சினிமாவில் இருந்தே விலகிய நடிகை

Friday, April 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தான் சினிமாவில் இருந்து விலக சிம்பு படத்தில் நடந்த கசப்பான அனுபவம் தான் காரணம் என நடிகை ஒருவர் பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்பு நடிப்பில் ‘கெட்டவன்’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு ஒருசில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க லேகா வாஷிங்டன் ஒப்பந்தமான நிலையில் அந்த படம் ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே நடந்த கசப்பான அனுபவங்களால், தான் தமிழ் சினிமாவை விட்டு விலகியதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை லேகா வாஷிங்டம் கூறியுள்ளார்.

'ஜெயங்கொண்டான்’ ’கல்யாண சமையல் சாதம்’ ஆகிய தமிழ் படங்களில் ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடிகை லேகா வாஷிங்டன் நடித்துள்ளார் என்பதும், தற்போது அவர் திருமணமாகி மும்பையில் செட்டிலாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.