close
Choose your channels

கரன்சி மாலை அணிந்து மகளுடன் போஸ் கொடுத்த வனிதா: வைரல் புகைப்படம்

Wednesday, July 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா கரன்சி மாலை அணிந்து மகளுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா கடந்த 1995ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர், திருமணம், குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், குடும்ப பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் மீண்டும் பிரபலம் ஆனார் என்பதும் அதன் பின்னர் அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் கரன்சி மாலை அணிந்து குபேர பூஜை நடத்திய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவரது மகள் ஜோவிகாவும் கரன்சி மாலை அணிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குபேரபூஜை குறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.