close
Choose your channels

சிம்புவுடன் மீண்டும் ஒரு படம்: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

Thursday, April 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' கடந்த ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சிம்பு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், அவரால் தான் நினைத்தபடி இந்த படத்தை இயக்க முடியவில்லை என்றும் ஆதிக் புகார் கூறினார். மேலும் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.20 கோடி நஷ்டம் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் சிம்புவுடன் தற்போது ஆதிக் சமாதானம் ஆகிவிட்டதாகவும், விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இருவரும் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலை ஆதிக் பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். சிம்புவுடன் 'AAA'  படம் இயக்கும்போது புரிதல் இல்லாமல் இருந்தது உண்மைதான் என்றும், இப்போது இருவரும் அடிக்கடி பேசி கொள்வதாகவும் கூறிய ஆதிக், சிம்புவுக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த படம் 'AAA'  படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் ஆதிக் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது ஆதிக், ஜிவி பிரகாஷ் நடிக்கும் ரொமான்ஸ் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.