close
Choose your channels

19 வருடம் கழித்து இரண்டாம் பாகம். செல்வராகவன் படத்தின் தயாரிப்பாளர் தகவல்!

Sunday, January 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் உருவான படம் ஒன்று 19 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’7ஜி ரெயின்போ காலனி’. ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 19 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ’7ஜி ரெயின்போ காலனி’ முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று அவர் கூறியிருப்பதால் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

’நானே வருவேன்’ படத்திற்கு பிறகு செல்வராகவன் இன்னும் அடுத்த படத்தை தொடங்கவில்லை என்பதால் அவரது அடுத்த படம் ’7ஜி ரெயின்போ காலனி’ ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.