close
Choose your channels

5 ஆண்டுகளுக்கு பின் சென்னை வந்த ரம்பா: என்ன படம் பார்த்தார் தெரியுமா?

Saturday, July 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் .

முழுக்க முழுக்க கனடாவில் செட்டிலாகிவிட்ட ரம்பா, ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது சென்னை வந்துள்ளார். அவர் சென்னையில் உள்ள திரையரங்கில் அருண்விஜய் நடித்த ’யானை’ படத்தை பார்த்துள்ளார். இந்த படத்தை அவர் அருண்விஜய்யின் சகோதரியும், ஹரியின் மனைவி பிரீதா உடன் பார்த்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ‘யானை’ படம் பார்த்தவுடன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஐந்து ஆண்டுகளுக்கு பின் குழந்தைகளுடன் சுற்றுலாவுக்காக இந்தியா வந்தேன் என்றும் அப்போது சென்னையில் 'யானை’ படத்தை பார்க்க குழந்தைகளுடன் பார்த்தேன் என்றும் கூறினார்.

இந்த படத்தின் காமெடி காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் குழந்தைகள் நன்றாக ரசித்து பார்த்தார்கள் என்றும் அருண்விஜய் சூப்பராக நடித்துள்ளார் என்று ஹரி அவர்கள் சிறப்பாக படத்தை இயக்கியுள்ளார் என்றும் ரம்பா பாராட்டுக்களை தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos