close
Choose your channels

ரஜினியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் டுவீட்டும் நீக்கம்!

Sunday, March 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று டுவிட்டரில் பதிவு செய்துள்ள வீடியோவை டுவிட்டர் இந்தியா அதிரடியாக நீக்கியது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் குறித்து அவர் கூறிய கருத்து சந்தேகத்திற்கு உரியது என்பதால் அந்த டுவிட்டை நீக்கியுள்ளதாக டுவிட்டர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரஜினியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் டுவிட்டும் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், கொரோனா வைரஸ் குறித்து ஒரு டுவிட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். இந்த டுவிட்டும் நீக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸ் குறித்து பவன் கல்யாண் தவறான தகவலை தெரிவித்து உள்ளதாக அந்த டுவீட்டை நீக்கியுள்ளதாக டுவிட்டர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. ரஜினிகாந்த் மற்றும் பவன் கல்யாண் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களின் டுவீட்டுக்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து பிரபலமானவர்கள் ஒரு கருத்தை வெளியிடும் போது அது குறித்து வல்லுனர்களிடம் கேட்டு ஆராய்ந்து உறுதி செய்த பின்னரே வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.