close
Choose your channels

'யானை' வெற்றியால் பான் - இந்தியா திரைப்படத்திற்கு தயாராகிறாரா ஹரி?

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் இன்று வெளியான ’யானை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஊடகங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’யானை’ திரைப்படம் நிச்சயம் வசூலில் சாதனை செய்யும் என்றும் ஹரி மற்றும் அருண்விஜய்யின் கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ என்ற திரைப்படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அந்த படம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அந்த படத்தின் கதைதான் ’யானை’ படத்தின் கதை என்று கூறப்பட்ட நிலையில் அதனை மறுத்த இயக்குனர் ஹரி, ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் சூர்யா தற்போது பான் - இந்தியா நடிகராக மாறியுள்ள நிலையில் ‘அருவா’ படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹரி ’‘அருவா’ படத்தில் உள்ள கேரக்டர்களில் யார் யார் பொருத்தமாக இருப்பார்களோ அவர்களை கண்டிப்பாக பயன்படுத்துவோம் என்றும் அது பிற மாநில கலைஞர்களாக இருந்தாலும் சரி என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து ‘அருவா’ திரைப்படம் மீண்டும் புத்துயிர் பெறும் என்றும், பான் - இந்தியா திரைப்படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos