close
Choose your channels

பெண் கவிஞராகும் ஐஸ்வர்யாராய், ஷாருக்கானுடன் இணைவாரா?

Tuesday, June 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராய், கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னர் நடித்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார். எனவே பாலிவுட்டில் அவர் மீண்டும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சாஹிர் லூதியான்வி மற்றும் அம்ரிதா பிரிதம் காதல் கதையை படமெடுக்க சஞ்சய் லீலா பன்சாலி திட்டமிட்டுள்ளார். பிரபல பெண் பஞ்சாபி கவிஞரான அமிர்தா பிரேம், முதல் பஞ்சாப் பெண் கவிஞர் என்பதும் இவர் கவிதை மட்டுமின்றி நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காரணமாக காதலர்களும் பிரிய வேண்டிய நிலை ஏற்படும் வகையில் அமைந்த இந்த கதையில் சாஹிர் லூதியான்வி கேரக்டரில் ஷாருக்கானையும், அம்ரிதா பிரிதம் கேரக்டரில் ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே மணிரத்னம், உள்ளிட்ட முன்னணி இயக்குனர் படங்களில் நடிக்க ஐஸ்வர்யாராய் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.