close
Choose your channels

ஓம் நமச்சிவாயா.. ஓம் நமச்சிவாயா.. முழு ஆன்மீகவாதியாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

Tuesday, April 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா’ என பேப்பரில் எழுதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவர் ஒரு முழு ஆன்மீகவாதியாக மாறிவிட்டாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி என்பதும் அவ்வப்போது அவர் இமயமலைக்கும் மற்ற கோவில்களுக்கும் சென்று வருவார் என்பது தெரிந்தது. இந்நிலையில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்பட பல கோயிலுக்கு விசிட் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ’லால் சலாம்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் மிகவும் மனக் கவலையுடன் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் முழு ஆன்மீகவாதியாக மாறி உள்ள புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓம் நமச்சிவாயா என பேப்பரில் பலமுறை எழுதிய புகைப்படத்தை அவர் பதிவு செய்ததில் இருந்து அவர் சிவ வழிபாட்டில் தீவிர ஈடுபாட்டில் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அவர் கோவிலுக்கு படியேறி நடந்து செல்வது, காசிக்கு சென்றது உட்பட பல புகைப்படங்களை அதில் பதிவு செய்யப்படுள்ளது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா திரையுலகில் மீண்டும் தனது திறமையை நிரூபிக்க விரைவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.