close
Choose your channels

உங்களை பார்த்து வளர்ந்தேன்... நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன்.. ஐஸ்வர்யா ரஜினியின் உருக்கமான பதிவு..

Monday, June 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்களைப் பார்த்து வளர்ந்தேன், நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் திரைப்படம் ’லால் சலாம்’. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருவதாகவும் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் படம் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ’உங்களைப் பார்த்து வளர்ந்தேன், ஆனால் உங்களை ஒரு நாள் வைத்து படம் இயக்குவேன் என நினைத்து கூட பார்த்ததில்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன், நீங்கள் தான் நான் என்பதை தற்போது உணர்கிறேன், ஒவ்வொரு நாளும் உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் அப்பா’ என்று பதிவு செய்துள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த உருக்கமான பதிவுக்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.