close
Choose your channels

காலம் எல்லா விஷயத்தையும் வேகவேகமாக மாற்றுகிறது: ஐஸ்வர்யா ரஜினியின் பதிவுக்கு என்ன அர்த்தம்?

Wednesday, March 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காலம் எல்லா விஷயங்களையும் வேகமாக மாற்றுகிறது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு தத்துவத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார் என்பதும் அதன் பின்னர் அவர் முழுமையாக திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக சமீபத்தில் அவர் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கி முடித்துள்ள நிலையில் விரைவில் அவர் ஒரு திரைப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’காலம் மிக வேகமாக நம்மை மாற்றுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் மேலும் கூறியபோது, ‘நீங்கள் காபியுடன் காலை செய்தித்தாளைப் கடைசியாக எப்போது படித்தீர்கள்? கடந்த சில வருடங்கள் நமது வாழ்க்கையை மிகவும் மாற்றி அமைத்துவிட்டது. லேண்ட்லைன் போன்கள், சிடி பிளேயர், டெஸ்க்டாப் கம்யூட்டர்கள், கடினமான இணைய இணைப்புகள், கேமராக்கள், டிவிடிபிளேர்கள் எல்லாமே அழிந்து விட்டன.

காலம் எப்போதும் நம்மை மாற்றிக் கொண்டே இருக்கிறது, மிக வேகமாக மாற்றுகிறது. அந்த கணத்தில் என்ன மகிழ்ச்சியாக இருக்கிறதோ, அதை அனுபவியுங்கள். வாழ்க்கையே அவசர அவசரமாக ஓடுவதுபோல் இருக்கிறது. அன்பு மற்றும் மகிழ்ச்சி ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகில் மாறிக் கொண்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினியின் இந்த பதிவுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.