close
Choose your channels

அஜித்தின் நேர் கொண்ட பார்வை: டைட்டில் குறித்து ஒரு பார்வை

Tuesday, March 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில், முன் அறிவிப்பு இன்றி திடீரென நேற்று இரவு வெளியானது. நேர் கொண்ட பார்வை ' என்பதுதான் இந்த படத்தின் டைட்டில்.

தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு இல்லாததால், இஷ்டத்துக்கு தலைப்பு வைக்கிற காலகட்டத்தில், மகாகவி பாரதியின் வைர வரியை அஜீத் படத் தலைப்பாக்கி இருப்பது படக்குழுவினர்களின் சிறப்பாக கருதப்படுகிறது. இது ஒரு கம்பீரமான தமிழ்த் தலைப்பு என்பதில் பெருமைதான்.

அரசியல், போலீஸ் பின்புலம் உள்ள ஒருவர் மூன்று பெண்களுக்கு தரும் தொல்லைகளும், அதில் இருந்து அந்த பெண்கள் விடுபட ஒரு வக்கீல் எடுக்கும் முயற்சிதான் இந்த படத்தின் கதை. இதில் வக்கீல் கேரக்ட்டரில் தான் அஜித் நடித்து வருகிறார்.

அஜீத்-வினோத் கூட்டணியின் தனித்துவம் எப்படி இருக்கும் என்பதற்கு படத்தின் தலைப்பே சிறந்த உதாரணம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.