close
Choose your channels

ஒரு பெண் காண்டம் வாங்கினால் என்ன தப்பு? அது ஒரு நார்மலான விஷயம் தானே: அக்சராஹாசன்

Monday, March 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு பெண் தனியாக சென்று காண்டம் வாங்கினால் என்ன தப்பு என்றும் அது ஒரு நார்மலான விஷயம் தானே என்றும் நடிகை அக்ஷரா ஹாசன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் நடித்த ’அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அக்சராஹாசன், ‘இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கடையில் ஆணுறை வாங்குவது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அக்சராஹாசன் பதிலளித்தபோது, ‘ஒரு பெண் தனியே கடைக்கு சென்று ஆணுறை வாங்கினால் என்ன தப்பு? அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் பாதுகாப்பாக செக்ஸ் செய்கிறீர்கள், ஒழுங்காக செக்ஸ் நடக்கிறது என்றுதான் அர்த்தம். அதில் என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பினார் .

மேலும் இங்கே பெண்கள் செக்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் அது முடியாது என்றும் பெண்களும் மனிதர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.