close
Choose your channels

முதல் படத்தின் சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்த எமிஜாக்சன்

Friday, July 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ’மதராசபட்டணம்’ என்ற திரைப்படத்தில் தான் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படம் வெளி வந்து 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகை எமிஜாக்சன் இந்த படத்தின் சிறப்புக் காட்சியை தனது உறவினர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்த ஒரு பதிவில் கூறியிருப்பதாவது: மதராசபட்டணம் படத்தின் 10 ஆண்டுகள். பிரகாசமான கண்களுடன் குழந்தை முகத்துடன் இந்தியாவை நான் முதன் முதலில் பார்த்தேன். இந்த படத்தின் பத்தாவது ஆண்டு விழாவை கொண்டாட காலை எழுந்தபோது ஒரு அழகான அனுபவமாக எனக்கு இருந்தது. எனது திரைப் பயணத்தை தொடங்குவதற்கு காரணமாக இருந்த இந்த படத்தை எனது குடும்பத்தினரும் காண, இந்த படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்தேன். எனது குடும்பத்தினர் அனைவரும் இந்த படத்தை கண்டு களித்தனர்.

இந்த படம் எனக்கு ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இயக்குனர் விஜய் அண்ணா அவர்களுக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.