close
Choose your channels

அனிதா சம்பத்தின் உருக்கமான பேச்சும், முரண்பாடும்! முதல் புரமோ காட்சிகள்

Thursday, October 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருசில போட்டியாளர்கள் இன்னும் யார் என்று கூட தெரியாத நிலையில் கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் ஹீரோ ஆகிவிட்டார் அனிதா சம்பத். அவரது உருக்கமான பேச்சு ஒருபுறம் நெகிழ்வை தந்தாலும், அதற்கு நேர்மாறாக அவருடைய நடவடிக்கை இருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது

அனிதா சம்பத் கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவுக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார். குறிப்பாக அவர் சுரேஷ் சக்கரவர்த்தியை தொடர்ச்சியாக வம்புக்கு இழுத்து வருவது ஆரம்பத்தில் சுவராசியமாக இருந்தாலும் போகப் போக அவர் எல்லை மீறுவது போன்றும், அவரே தனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொள்வது போன்றும் 

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் அவருடைய உருக்கமான பேச்சும், சக போட்டியாளர்களிடம் அவர் உரையாடுவதும் முரண்பாடாக உள்ளது. எனக்கு அட்ரஸ் எதுவும் கிடையாது, நமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நல்லா இருக்கும் என்றும்,  என் வீட்டில் நான்தான் பெற்றோர் என்றும், என்னுடைய அப்பா அம்மா தம்பி எல்லாம் குழந்தை மாதிரி என்று கூறுகிறார். ஆனால் சக போட்டியாளர்களிடம் பேசும்போது, ‘நான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய பெயரை சம்பாதித்து இருக்கிறேன், அதைக் கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்றும், யார் கூடவும் என்னைக் கம்பேர் செய்யாதீர்கள் என்றும், நான் எல்லாரையும் சகித்துக் கொண்டு போகும் பழக்கம் எனக்கு கிடையாது என்று கூறுகிறார்

இவ்வாறு மாறிமாறி அனிதா சம்பத் பேசும் காட்சிகள் அவரது குணத்தை ஓரளவுக்கு வெளிக்காட்டியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.