close
Choose your channels

லோகேஷ் படத்தில் நடித்தால் சாக வேண்டும்: நயன்தாரா பட வில்லன் நடிகர் பேட்டி..!

Wednesday, June 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது படத்தில் உள்ள முக்கிய கேரக்டர்களை சாகடித்து விடுவார் என்றும் அவரது படத்தில் நடித்தால் நான் சாகவேண்டும் என்றும் நயன்தாரா படத்தில் வில்லனாக நடித்த நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எல்சியு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது படத்தில் வில்லன்கள் உள்பட முக்கிய கேரக்டர்கள் சாகடிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்தவரும் பாலிவுட் இயக்குனருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் பேட்டி அளித்த பேட்டியில், ‘லோகேஷ் கனகராஜ் படத்தில் எனக்கு எந்த கேரக்டரும் வேண்டாம், ஏனெனில் அவரது படத்தில் எனக்கு கேரக்டர் கொடுத்தால் நான் இறந்து விடுவேன், அவர் நடிகர்களுக்கு புகழ் பெற்ற மரணத்தை கொடுத்து வருகிறார்’ என்று கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.