close
Choose your channels

ஆரவ்வுடனான உறவு குறித்து ஓவியா விளக்கம்

Sunday, January 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஆரவ்வுடன் ஓவியாவுக்கு காதல் ஏற்பட்ட நிலையில் அதன்பின் அவருடன் காதல் இல்லை, நான் சிங்கிள் தான் என்று ஓவியா ஒரு டூவீட்டை பதிவு செய்தார். ஆனாலும் இருவரும் பல பொது இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளியானதால் இருவரும் நட்பையும் தாண்டி அடுத்தகட்ட உறவில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஓவியா, ஆரவ்வுடனான நட்பு குறித்து கூறியபோது, 'எனக்கும் ஆரவ்வுக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது. ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளோம். இப்போது எங்களுடயே உறவு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

ஆரவ் அவர் நடிக்கும் படங்களிலும், நான் என்னுடைய படங்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவொருக்கு ஒருவர் அன்பு பாராட்டி வருகிறோம். இந்த நட்பு குறித்து நான் வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. எங்கள் உறவில் அடுத்தகட்ட மாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் அதனை அறிவிப்பேன்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.