close
Choose your channels

மீண்டும் இணைகிறது 'பாணா காத்தாடி' டீம்

Friday, January 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2010ஆம் ஆண்டு பத்ரி வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த 'பாணா காத்தாடி' என்ற படம் அதர்வா அறிமுகமாகிய படம் மட்டுமின்றி சமந்தாவுக்கும் கோலிவுட்டில் நல்ல பெயரை வாங்கித்தந்த முதல் படம். இந்த படத்திற்கு முன் கவுதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் சமந்தா நடித்திருந்தாலும், ஹீரோயினியாக சமந்தா நடித்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சமந்தா விஜய், தனுஷ், சூர்யா உள்பட பெரிய நட்சத்திரங்களின் படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் தனது முதல் ஹீரோவுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

'ஈட்டி' வெற்றிக்கு பின்னர் 'KickAss Entertainment' என்ற படநிறுவனத்தை தொடங்கியுள்ள அதர்வா, இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை 'பாணா காத்தாடி' இயக்குனர் பத்ரி வெங்கட் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகள் உறுதியாகும் பட்சத்தில் 'பாணா காத்தாடி' டீம் மீண்டும் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.