close
Choose your channels

தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையும் அதர்வா

Tuesday, January 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில் படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன் அதனையடுத்து சூப்பர் ஹிட் படமான 'அங்காடித்தெரு' மற்றும் 'அரவான்', 'காவியத்தலைவன்' போன்ற தரமான படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் 'ஈட்டி' நாயகன் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'ஈட்டி' படத்தின் வெற்றிக்கு பின்னர் அதர்வா 'கணிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்ததாக அதர்வாவின் சொந்த தயாரிப்பில் 'பாணா காத்தாடி' இயக்குனர் பத்ரி வெங்கடேஷின் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலனுடன் அதர்வா கைகோர்க்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வசந்தபாலனின் படங்கள் அனைத்துமே அழுத்தமான கதையம்சத்துடன் இருக்கும் என்ற நிலையில் அவருடன் அதர்வாவும் இணையும் பட்சத்தில் இந்த படம் மிகச்சிறப்பான ஒரு படமாக உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.