close
Choose your channels

ஆயிஷாவை திடீரென தூக்கி கொண்டு ஓடிய அசீம்.. பிக்பாஸ் வீட்டில் என்ன ஆச்சு?

Tuesday, October 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா திடீரென மயங்கி விழுந்ததாகவும் அவரை அசீம் தூக்கிக் கொண்டு மருத்துவ அறைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அசீம் மற்றும் ஆயிஷா இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெரும் பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரிந்ததே. ஆயிஷாவை அசீம் வாடி போடி என கூறியதும் பதிலுக்கு ஆயிஷா செருப்பை கழட்டி அவர் மீது தூக்கி எறிந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று ஆயிஷா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அசீம் பதறியடித்து அவரை தூக்கிக் கொண்டு மருத்துவ அறைக்கு ஓடினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் விஜே மகேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியே போக போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆயிஷாவும் இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது முறையாக மயங்கி விழுந்து உள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா? அல்லது வெளியேற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஆயிஷா மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்ட போதிலும் அவர் மயங்கி விழுந்ததும் முதல் நபராக பதறியடித்து அவரை தூக்கிக் கொண்டு மருத்துவ அறைக்கு ஓடிய அசீமின் மனிதாபிமானத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.