close
Choose your channels

காதல் மனைவியை விவாகரத்து செய்தார் பாலாஜி மோகன்

Friday, May 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.


நான் எனது மனைவியை விவாகரத்து செய்துள்ளது குறித்து பல்வேறு வதந்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். நானும் எனது மனைவி அருணாவும் கருத்துவேறுபாடு காரணமாக மூன்று வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம், தற்போது இருவருக்கும் சட்டபூர்வமான விவாகரத்து கிடைத்துள்ளதால் இருவரும் அவரவர் பாதையில் செல்ல முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகனும், அருணாவும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். ஆனால் ஒரே வருடத்தில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி மோகன் விரைவில் தனுஷ் நடிக்கும் 'மாரி 2' படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.