close
Choose your channels

ஒரு இளைஞரை திருமணம் செய்ய போட்டி போட்ட 2 பெண்கள்: இளைஞருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

Sunday, January 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு இளைஞரை இரண்டு இளம் பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போட்டி போட்ட நிலையில் இந்தப் போட்டியில் பரிதாபமாக அந்த இளைஞர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராணிப்புறா என்ற பகுதியைச் சேர்ந்த லியொட்டி ஜோஸ்வா என்பவர் அஸ்மிதா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக இருந்த நிலையில் திடீரென சமீபத்தில் டாக்லின் என்ற பெண்ணுடன் ஜோஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பாலியல் உறவு வரை சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜோஸ்வா மற்றும் டாக்லின் உறவு குறித்து கேள்விப்பட்ட அஸ்மிதா அதிர்ச்சி அடைந்து காதலனுடன் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மூவரும் பேசி இந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோஸ்வா, டாக்லின் மற்றும் அஸ்மிதா மூவரும் சோமேஸ்வரன் கடல் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காதலனுடன் சேர்வது யார்? விட்டுக் கொடுப்பது யார்? என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது திடீரென டாக்லின் மற்றும் அஸ்மிதா இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்து கொண்டதாகவும் தெரிகிறது.

இதில் மனமுடைந்து போன அஸ்மிதா தற்கொலை செய்து கொள்வதாக கூறி கடலுக்குள் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோஸ்வா, அஸ்மிதாவை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தார். அஸ்மிதாவை அவர் காப்பாற்றி விட்டாலும் ஜோஸ்வா நிறைய கடல் தண்ணீரை குடித்துவிட்டதால் அங்கேயே மயங்கி விழுந்தார். அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இளைஞரை இரண்டு இளம் பெண்கள் மாறி மாறி காதலித்து வந்த நிலையில் தற்போது இரண்டு பெண்களுமே அந்த இளைஞரை இழந்துவிட்டது பரிதாபத்திற்குரியதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.