close
Choose your channels

ஊடகங்கள் மீது மானநஷ்ட போடுவேன்: பார் நாகராஜன்

Thursday, March 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகிய 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் வேறு யாரும் தொடர்புடையவர்கள் இல்லை என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேட்டி அளித்தார்.

ஆனால் அதன்பின் வெளியான வீடியோ ஒன்றில் பெண்களை பாலியல் கொடுமை செய்யும் கும்பலில் பார் நாகராஜன் என்பவர் இருந்ததாக தெரிய வந்தது. இதனால் சாதாரண அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பார் நாகராஜனை பாலியல் வழக்கில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது

இந்த நிலையில் பார் நாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், சதீஷின் உருவத்தை நான் என்று தவறாக நினைத்து சில ஊடகங்கள் பொய்ச்செய்தியை பரப்பி வருவதாகவும், இந்த செய்திகள் தொடர்ந்தால் ஊடகங்கள் மீது மானநஷ்ட வழக்கு பதிவு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனக்கும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தன்னை தவறாக இந்த வழக்கில் சம்பந்தப்படுத்துவது தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை கொடுத்துள்ளதாகவும் அந்த வீடியோவில் பார் நாகராஜன் மேலும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.