close
Choose your channels

 இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டியவர் இன்று கோடீஸ்வரர்! ஒரு ஆச்சரிய தகவல்

Thursday, May 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆட்டோ ஓட்டுபவர்கள் நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டினாலும் பெட்ரோல் செலவு போக குடும்பத்தை ஓட்டவே கஷ்டப்பட்டு வரும் நிலையில் பெங்களூரை சேர்ந்த சுப்பிரமணி என்ற ஆட்டோ டிரைவர் ரூ.1.6 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருவதோடு லட்சக்கணக்கான சொத்துக்களையும் சேர்த்துள்ளார். இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பெங்களூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க்கு முன் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த சுப்பிரமணியம் என்பவர் பெங்களூரில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் முக்கிய பகுதியில் ஒரு தனி பங்களாவை ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அதன்பின் அவர் நண்பர்களுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

இதுகுறித்து கேள்விப்பட்ட வருமான வரித்துறையினர் அவரது பங்களாவிற்கு சென்று விசாரணை நடத்தியதில் பெங்களூரில் பள்ளி நடத்தி வரும் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் அவருடைய சேவையை பாராட்டி இந்த பங்களாவை வாங்க உதவியதாக கூறினார். ஆனால் அவருடைய பங்களாவை வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது ரொக்கப்பணம் மற்றும் ரூ. 7 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. ஒரு முக்கிய அரசியல் புள்ளிக்கு பினாமியாக அவர் செயல்பட்டு வருவதாக சந்தேகம் அடைந்த வருமான வரித்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.