close
Choose your channels

பானுப்ரியா விவகாரம்: போலீஸ் அதிரடியால் தாயும் சிறுமியும் கைது

Saturday, February 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதாக அவரது தாயார் ஆந்திர போலீசில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தனது வீட்டில் இருந்து நகை, பணத்தை வேலை பார்த்த சிறுமி திருடி அவரது தாயாரிடம் கொடுத்ததாக பானுப்ரியா தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது திருடியதை சிறுமி ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து தாயும் சிறுமி கைது செய்யப்பட்டனர். தாய் புழல் சிறையிலும் சிறுமி கூர்நோக்கு இல்லத்டிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பானுப்ரியா வீட்டில் இருந்து பத்து சவரன் நகை மற்றும் ஒருலட்ச ரூபாய் ரொக்கம் திருடியதாக சிறுமி மீதும் அவருடைய தாயார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.