close
Choose your channels

இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னை வருவது எப்போது? சோகமாக காத்திருக்கும் திரையுலகம்..!

Friday, January 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று இலங்கையில் புற்றுநோய் காரணமாக காலமான நிலையில் அவரது உடல் இன்று மாலை சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உடல் மோசம் அடைந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். மறைந்த பவதாரணிக்கு வயது 47.

இந்த நிலையில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டுவரப்பட இருப்பதாகவும் சென்னையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. பவதாரிணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் திரையுலகினர் சோகத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos