close
Choose your channels

ஐஸ்வர்யாவுக்கு ஜால்ரா போடும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் அதிகபட்ச சலுகைகளை வழங்குவதாக குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக எழுந்து வருகின்றது. ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கமல்ஹாசனே மறைமுகமாக ஒருசில முறை பேசிவிட்டார். இருப்பினும் பிக்பாஸ் தனது நிலையை மாற்றி கொள்ளவில்லை

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ்1 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பிக்பாஸ் பேச வைத்துள்ளதாக தெரிகிறது. வீட்டிற்கு நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை ஆர்த்தி, 'பிக்பாஸ் வீட்டின் மருமகளே' என பாராட்டினார். மேலும் ஐஸ்வர்யா கோபமின்றி எப்படி வீட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அதேபோல் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் அதிகபட்ச பொய் கூறி சென்றாயனை ஐஸ்வர்யா ஏமாற்றியதால் கமல்ஹாசனே கடுப்பானார். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடியது ஐஸ்வர்யாதான் என்று காயத்ரி பேசினார். ஐஸ்வர்யா பொய் சொன்னபோதிலும் அதுவொரு யுக்திதான் என்றும், சொன்ன பொய்யை அவர் மறைக்காமல் ஒப்புக்கொண்டதால் அவர்தான் சிறப்பானவர் என்றும் கூறினார்.

ஐஸ்வர்யா மீது மக்கள் மனதில் பதிந்திருக்கும் நெகட்டிவ் எண்ணங்களை போக்க பிக்பாஸ் இந்த யுக்தியை கடைபிடித்திருப்பது போல் தெரிகிறது. மொத்தத்தில் இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.