close
Choose your channels

கத்துவது, பொய் சொல்வது, அழுவது இதுதான் ஐஸ்வர்யாவின் வேலை: பிக்பாஸ் 1 பிரபலம்

Friday, September 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐஸ்வர்யாவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்து அவரை திட்டாதவர்களே இல்லை என கூறலாம். அவரது நெருங்கிய தோழியான யாஷிகா கூட ஐஸ்வர்யாவிடம் இருந்து ஒதுங்கி இருக்கவே கடந்த சில நாட்களாக முயல்கிறார். ஐஸ்வர்யாவின் நெகட்டிவ் இமேஜை சரிசெய்ய ஆர்த்தி, காயத்ரி ஆகியோர்களை பிக்பாஸ் அனுப்பினாலும் அவர்கள் இருக்கும் வரை நல்ல பிள்ளையாக இருந்த ஐஸ்வர்யா, அவர்கள் வெளியேறியதும் மீண்டும் முருங்கை மரமேறிய வேதாளம் போல் மாறிவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான காஜல், ஐஸ்வர்யா குறித்து கூறியபோது, 'நான் பார்த்தவரை, கத்துவது, பொய் சொல்வது, பிறரை கொடுமைப்படுத்துவது, அழுவது, இதையெல்லம்தான் ஐஸ்வர்யா சிறப்பாகச் செய்கிறார். ஐஸ்வர்யாவின் கையில் வாலினி ஸ்ப்ரேயை அடிக்கும்போது கண்ணை மூடிக்கொள்ள ரித்விகா கூறினார். ஆனால் விஜயலட்சுமியின் கண்ணிலேயே வாலினி ஸ்ப்ரேயை அடித்து மனிதத்தன்மையே இல்லாதவர் என்பதை ஐஸ்வர்யா நிரூபித்தார்.

ஒரு டாஸ்க்கை செய்ய முடியாவிட்டால் கையை எடுத்துவிடலாம். அதைவிடுத்து எல்லோரின் கவனத்தை தன்மீது திருப்ப அவர் அழுது நாடகமாடியது கொடுமை. ஒருவகையில் அவரை பார்த்தால் பாவமாகவும் உள்ளது. அவர் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.