close
Choose your channels

பணப்பெட்டியை எடுத்தது ஏன்? சிபி கூறும் காரணம்!

Thursday, January 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 95வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இறுதிப் போட்டிக்குச் செல்லும் நான்கு போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து பார்வையாளர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளரை வெளியேற்ற பணப்பெட்டி உள்ளே வைக்கப்பட்டது என்பதும் ரூபாய் மூன்று லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணப்பெட்டியின் மதிப்பு சற்று முன் வெளியான வீடியோவில் இருந்து 11 லட்சம் வரை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் வீட்டில் 12 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்து விட்டு சிபி வெளியேறி விட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் 12 லட்ச ரூபாய் என பணப்பெட்டியின் மதிப்பு வந்தவுடன் சிபி தான் எடுத்துவிட்டு செல்லப் போவதாக கூறுகிறார்.

இன்னும் ஒரு வாரம் இருந்துவிட்டு போகலாமே என்று தாமரை கூறும்போது ’நீங்கள் அந்த பெட்டியை எடுக்க போகிறார்களா? என்று கேட்கிறார். நான் எடுக்கவில்லை என தாமரை கூறியவுடன் ’அப்படி என்றால் நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று சிபி கூறுகிறார். அப்போது பிரியங்கா, ‘இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினால் தொகை அதிகரிக்கும் என்று கூற அதற்கு சிபி, ‘தொகைக்காக இல்லை, நான் ஒண்ணாம் நம்பரில் இருந்தபோது இருந்த மன உறுதி தற்போது என்னிடம் இல்லை, அது எனக்கே நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் நான் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறேன்’ என்று சிபி காரணம் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.