close
Choose your channels

இதையெல்லாம் எப்படி அனுமதிக்கிறீங்க: பிக்பாஸிடம் புகார் அளித்த ஸ்ருதி

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் அனைத்து நாட்களிலும் அபிஷேக், தான் ஹீரோவாக வேண்டும் என்று எடுக்கும் கோமாளித்தனமான முயற்சிகள் சக போட்டியாளர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் எரிச்சலாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக்கின் அட்ராசிட்டி ஒரு பக்கம் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் தினசரி புரமோக்களிலும் தொடர்ந்து அவர்தான் இடம் இருக்கிறார் என்பதும் ஒரு மணி நேர நிகழ்ச்சியிலும் அவர் முக்கால்வாசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ் குழுவினர் அபிஷேக்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது இந்த நிகழ்ச்சிக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் ஸ்ருதி பிக்பாஸ் இடம் புகார் ஒன்றை அளிக்கிறார். அதில் இந்த வீட்டில் ஒருசிலர் எல்லை மீறுகிறார்கள். அதிலும் மெசேஜ் கேம் விளையாடுவதற்கு பிக்பாஸில் எப்படி அனுமதிக்கிறார்கள்? இதையெல்லாம் கேமராவில் படம் பிடிக்கிறீர்களா? என்று தெரியவில்லை. இதனை உடனடியாக பேசி முடித்து வையுங்கள் என்று கூறுகிறார்.

அப்போது அபிஷேக் இடம் பிரியங்கா ’ஒருவரை இன்ஃப்ளூயன்ஸ் செய்வது தவறு என்று கூற அதற்கு அபிஷேக் ’அது என்னுடைய பவர் என்று பதிலளிக்கின்றார். அப்போது சிபி ’அவ்வாறு எல்லை மீறுபவர்களை தடுக்க உரிமை எங்களுக்கு உண்டு, அதை கேள்வி கேட்க கூடாது என்று கூறுகிறார். மொத்தத்தில் அபிஷேக்கின் ஆட்டம் இப்போதைக்கு நிற்காது என்றே தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.