close
Choose your channels

நான் தியாகத்தில விட்டுக்கொடுக்கலை: லாஸ்லியாவுக்கு தர்ஷன் விளக்கம்

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் டாஸ்க்கில் தன்னால் தொடர முடியவில்லை என்ற நிலை வந்தவுடன் உண்மையை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தான் விட்டுக்கொடுப்பதாக வனிதா டாஸ்க்கில் இருந்து வெளியேறினார். அதனையடுத்து சிறிது நேரத்தில் தர்ஷனும் விட்டுக்கொடுக்க லாஸ்லியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வெற்றியை ஏற்றுக்கொள்ள லாஸ்லியாவுக்கு விருப்பமில்லை. வனிதா விட்டுக்கொடுத்ததாக கூறினாலும் அவரிடம் எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பாத லாஸ்லியா, தர்ஷனிடம் மட்டும் வாக்குவாதம் செய்கிறார். அனைவரும் உனக்காக விட்டுக்கொடுத்து தியாகம் செய்தபோது அந்த தியாகம் எனக்கு தேவையில்லை, என்னுடைய முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று சொன்ன நீ, இப்போது எனக்கு மட்டும் எப்படி தியாகம் செய்து விட்டுக்கொடுக்கலாம் என வாதாடுகிறார்.

இதற்கு தர்ஷன் தனது விளக்கத்தை அளிக்கின்றார். நீ இன்னும் ஒருமுறை கூட கேப்டன் பதவிக்கு வரவில்லை. அந்த அனுபவம் உனக்கு வேண்டும் என்பதற்காகத்தான் விட்டுக்கொடுத்தேன். உன் கேப்டஷிப்பை மக்கள் பார்க்க வேண்டும். நான் தியாகம் செய்யவில்லை. நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். உனக்கு ஒரு அனுபவம் வேண்டும் என்பதற்காகத்தான் நான் விட்டுக்கொடுத்தேன்' என்று கூறினார். ஆனால் இந்த சமாதானத்தை லாஸ்லியா ஏற்றுக்கொள்ளவில்லை. ஒண்ணுமே நடக்காம ஒருத்தங்க வெளியில போயிருக்காங்க.. அதனால் இப்படியான முடிவை தயவுசெஞ்சு இனிமே எடுக்காத' என்று தர்ஷனிடம் கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.