close
Choose your channels

ரொம்ப தவறு கவின்! சேரன் எழுதிய கடிதம்

Tuesday, September 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சேரன் வெளியேறினாலும் அவர் தற்போது சீக்ரெட் அறையில் உள்ளார். சேரன் சீக்ரெட் அறையில் இருப்பது போட்டியாளர்களுக்கு இதுவரை தெரியாது. இன்னும் ஒரு சில நாட்களில் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளராக மாறிவிடுவார்.

இந்த நிலையில் நேற்று லாஸ்லியாவை கவின் காதல் குறித்த முடிவை சொல்லும்படி அழுத்தம் கொடுத்தார். லாஸ்லியா ஏதேதோ சொல்லி மழுப்ப முயன்றபோதிலும் மீண்டும் மீண்டும் கவின் அழுத்தம் கொடுத்ததை சீக்ரெண்ட் அறையில் இருந்து பார்த்த சேரன் அதிர்ச்சி அடைந்து இதனை பார்வையாளர்களுக்கு ஒரு செய்தியாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சேரன் எழுதியதாக ஒரு கடிதம் கவினுக்கு வருகிறது. அதில், ’வணக்கம் தம்பி! அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவருமே தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பேசி கொள்ளலாம். இருவரும் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினேன். அப்படியிருந்தும் லாஸ்லியாவிடம் இங்கே முடிவை சொல்ல சொல்வது நியாயமா? ’செலிபிரேட்’ பண்ணலாம் என்று நீங்கள் நினைப்பது ரொம்ப தவறாக தோன்றுகிறது. ஸ்டாப் பண்ணுவிங்களா? என்று எழுதப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை தர்ஷன் படிக்க, கவினும் லாஸ்லியாவும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

சேரன் இல்லாத தைரியத்தில் பேசிய கவின், மீண்டும் சேரன் அடுத்த வாரம் வீட்டிற்குள் வந்தால் அவரது நிலைமை என்ன ஆகுமோ? என்றே நினைக்க தோன்றுகிறது. அதே நேரத்தில் கவின் - லாஸ்லியா விஷயத்தில் சேரன் அதிக உரிமை எடுத்து கொள்வது போன்றும் தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.