close
Choose your channels

கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர்: ஜெயில் தண்டனைக்கு பதில் கஸ்தூரி தண்டனையா?

Thursday, August 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இன்று கஸ்தூரி புதிதாக நுழைந்த நிலையில் அவர் சிறப்பு விருந்தினரா? அல்லது புதிய போட்டியாளராக? என்ற குழப்பம் இருந்து வந்தது. இந்த குழப்பத்திற்கு சற்று முன் வெளியான புரமோ வீடியோ பதிலளித்துள்ளது. கஸ்தூரி பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர்தான் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது

அதே நேரத்தில் கஸ்தூரிக்கு பிக்பாஸ் ஒரு ஸ்பெஷல் பவரையும் கொடுத்து அனுப்பியுள்ளார் என்பதும் தெரியவருகிறது. இந்த நிலையில் கஸ்தூரி மற்ற போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கூறிய ஸ்பெஷல் பவர் குறித்து கூறியபோது, 'புதிய போட்டியாளராக வந்திருக்கும் தனக்கு ஒரு ஸ்பெஷல் பவர் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தான் விரும்பும் நபர் தான் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் குறிப்பில் உள்ளதை அறிவிக்கின்றார். இதனையடுத்து குடைபிடிப்பது, தோப்புக்கரணம் போடுவது, தலைகீழாக நிற்பது போன்ற டாஸ்குகளை கஸ்தூரி ஒருசிலருக்கு வழங்குகிறார். மேலும் இந்த வாரம் ஜெயில் தண்டனை கிடையாது என்பதும் கஸ்தூரி தண்டனை மட்டுமே உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது

கஸ்தூரிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் பவர் சேரன் உள்பட ஒருசிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. கஸ்தூரியின் புதிய வருகை நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குமா? அல்லது மேலும் சிக்கலை உண்டாக்குமா? என்பது போக போகத்தான் தெரியும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.