close
Choose your channels

மீராமிதுனின் அடுத்த டார்கெட் லாஸ்லியாவா? 

Monday, July 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மீராமிதுன் 16வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு ரணகளமாகிவிட்டது தெரிந்ததே. அனேகமாக மீரா சண்டை போடாத நபர் லாஸ்லியா ஒருவராகத்தான் இருக்கும் என்ற நிலையில் இன்று அவரிடமும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார் மீரா.

கமல் கூறிய எவிக்சனின்போது லாஸ்லியா, மீராவின் பெயரை டிக் செய்தார். அதனால் கோபம் அடைந்த மீரா, லாஸ்லியாவிடம், 'நீ என் பெயரை டிக் செய்தது ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய நெருங்கிய தோழியே எனக்கு எதிராக வேலை செய்தது போல் உணர்ந்தேன். ஒருவேளை நான் உன்னை தோழியாக பார்த்தது எனது தவறு என நினைக்கின்றேன்' என்று கூறினார். அதற்கு லாஸ்லியா, 'எனக்கு எல்லோருமே நண்பர்கள் தான், நீங்கள் இப்படி நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் மதுமிதா பக்கம் இருந்திங்க, அவங்ககிட்ட நீங்க சொன்ன விஷயம் எனக்கு தப்பா பட்டுச்சு', என கூறிவிட்டு மீராவின் பதிலைக்கூட கேட்காமல் எழுந்து சென்றுவிட்டார்.

முதலில் அபிராமி, அதன்பின்னர் வனிதா, அடுத்ததாக முகின், மதுமிதா என ஒவ்வொருவரையும் டார்கெட் செய்து அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை உண்டாக்கும் முயற்சியில் இருக்கும் மீரா, லாஸ்லியாவுக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதை புரிந்து கொண்டு தற்போது அவரது இமேஜையும் உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீராவின் அடுத்த டார்கெட் ஒருவேளை லாஸ்லியாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் லாஸ்லியா புத்திசாலி என்பதால் அவருடைய வலையில் சிக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.