close
Choose your channels

கமல் கூறிய வாழைப்பழக்கதை: கடுப்பில் சாக்சி

Saturday, July 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு பரபரப்பாக இருந்தது என்றால் அதற்கு கவினின் முக்கோண காதல் கதை தான் காரணம். சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் மாறி மாறி காதல் செய்து கொண்டிருந்த கவின், ஒரு கட்டத்தில் ஒரே ஒரு சாக்லேட்டினால் இருவரின் மனக்குறைக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் திணறினார் கவின். ஒரு வழியாக நேற்று இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் அமைதி திரும்பியுள்ள நிலையில் இன்று மீண்டும் அந்த பிரச்சனையை கமல் கிளப்புகிறார். செந்தில் ஒரு படத்தில் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி, ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு இன்னொரு வாழைப்பழத்தை பார்த்து அதுதான் அந்த வாழைப்பழம் என்று கூறுவார். ஆனால் நீங்கள் நிஜமாகவே இரண்டு வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்க, அப்போது கமல்ஹாசனை சாக்சி முறைத்துப் பார்க்கின்றார். அதனை புரிந்து கொண்ட கமல்ஹாசன், சாக்சி தன்னை ஒரு மாதிரி பார்ப்பதாகவும், முக்கோணல் காதல் கதை அவருக்கு பிடிக்கவில்லையோ? என்றும் கூறுகிறார்

அப்போது கவின் 'சார் நான் கஷ்டப்பட்டு இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி இருக்கின்றேன். இத்தோட இந்த பிரச்சனையை விட்டுவிடலாம் என்று கெஞ்ச், கமலஹாசனும் பார்வையாளர்களும் சிரிப்பதோடு இன்றைய கடைசி புரமோ முடிவடைந்துள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.