close
Choose your channels

இனிமேல் நல்லதுதான் நடக்கும்: லாஸ்லியாவுக்கு ஷெரின் தாயார் ஆறுதல்

Friday, September 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் வந்ததால் வாரம் போனதே தெரியவில்லை. குறிப்பாக லாஸ்லியா குடும்பத்தினர் வருகையை வைத்தே ஒரு நாள் ஓட்டியாகிவிட்டது. இன்று கவினின் நண்பர், சாண்டியின் குடும்பத்தினர் ஆகியோர் வந்து முடிந்துவிட்ட நிலையில் கடைசியாக ஷெரின் குடும்பத்தினர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஷெரின் தாயார் அனைவரிடமும் பாசத்தை பொழிந்தது மட்டுமின்றி லாஸ்லியாவிடம் கூடுதலாக பாசமழையை பொழிந்தார். இனிமேல் உனக்கு நல்லதுதான் நடக்கும், தைரியமாக இரு’ என்று அவர் கூறிய வார்த்தைகள் லாஸ்லியாவுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும். மேலும் சாண்டியிடம், ‘நீ ரொம்ப ஷெரினுக்கு ரொம்ப டார்ச்சர் கொடுக்குற? நான் பார்த்துகிட்டேன் இருக்கின்றேன்’ என்று ஜாலியாக ஷெரின் தாயார் கூறியதும் ரசிக்கும் வகையில் இருந்தது.

ஒரு பக்கம் தர்ஷன் மீது ஷெரின் தாயார் அதிக பாசம் காட்ட, இன்னொரு பக்கம் முகின் உற்சாகமாக என இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல எண்டர்டெயின்மெண்ட் இருக்கின்றது என்பது மட்டும் தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்களில் இந்த ஐந்து நாட்கள்தான் பெஸ்ட் என கூறும் வகையில் இந்த வாரம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.