close
Choose your channels

வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதாவா? திடீரென பொங்கி எழுந்ததால் பரபரப்பு

Wednesday, August 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் வனிதாவின் வருகைக்குப்பின் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் பெரும் பரபரப்படைந்தனர். குறிப்பாக ஆண் போட்டியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வனிதாவின் செயல்பாடுகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் முதல் டார்கெட்டாக அபிராமியாக இருந்த நிலையில் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல் வனிதா ஆரம்பித்து வைத்த அபிராமி-முகின் பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அபிராமி முகினிடம் மன்னிப்பு கேட்டதும், முகின் சமாதானம் அடைந்ததும் இனிமேல் இந்த பிரச்சனை நீடிக்காது என்பதை உறுதி செய்தது. இதனையடுத்து வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதா என்பது இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண்களை பயன்படுத்தி கொள்வதாகவும், பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தி வருவதாகவும் திடீரென மதுமிதா பொங்கி எழுகிறார். வார்த்தைக்கு வார்த்தை வனிதாவை 'மேடம்' 'மேடம்' என்று கூறிய மதுமிதா, 'மேடம் கூறியவாறு இந்த வீட்டின் கதவுகள் பத்து நிமிடங்கள் திறக்கப்பட்டால் வீட்டை விட்டு வெளியேறும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்' என்று ஆவேசமாக பொங்கினார் மதுமிதா.

மதுமிதாவின் குற்றச்சாட்டை கவின், சாண்டி ஆகியோர் மறுத்து சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் மதுமிதா சமாதானம் ஆனது போல் தெரிகிறது. இந்த பிரச்சனையை ஒன்றுமே தெரியாதது போல் வனிதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.