close
Choose your channels

கோரத்தாண்டவமாடிய அர்ச்சனா: கண்ணீர் விட்டு கலங்கிய பாலாஜி!

Wednesday, October 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அர்ச்சனா கிளப்பிவிட்ட ஒரு சிறு பிரச்சனை இன்று மிகப் பெரியதாக வெடித்து கோரத்தாண்டவம் ஆடும் அளவுக்கு ஆகிவிட்டது

தூங்கிக்கொண்டு இருந்த பாலாஜியை எழுப்பி பெருக்க சொல்லுங்கள் என அர்ச்சனா வேல்முருகனை நேற்று தூண்டிவிட இதனால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்றும் தொடர்கிறது என்பது இன்றைய முதல் புரமோவில் இருந்து தெரிய வருகிறது. பாலாஜியிடம் கோரத்தாண்டவம் ஆடும் அர்ச்சனா, ‘நாங்கள் எல்லாம் பாலாஜி என்ன சொன்னாலும் அதை கேட்டு அமைதியாக இருக்க முடியாது என்றும் நான் ஒரு கேப்டன் என்றும் நான்கு நாட்கள் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் அர்ச்சனா அதிகாரமாக கூறுகிறார்

ஆனால் வழக்கம்போல் அதையெல்லாம் சட்டை செய்யாத பாலாஜி எனக்கு கேப்டனை பிடிக்கலை என்று சொல்லி விட்டு வெளியேறுகிறார். பாலாஜிக்கு ஆதரவாக யாருமே பேசாத நிலையில் தனியாக உட்கார்ந்து அவர் கண் கலங்கும் காட்சிகளுடன் முதல் புரமோ முடிகிறது

அர்ச்சனா ஒரு குரூப்பை சேர்த்துக்கொண்டு நியாயமாக விளையாடி வரும் பாலாஜியை கார்னர் செய்வதும், வேண்டுமென்றே கோரத்தாண்டவம் ஆடியதும் பார்வையாளர்களுக்கு எரிச்சலை தருகிறது. வரும் சனி, ஞாயிறுகளில் அர்ச்சனாவுக்கு சரியான அர்ச்சனை இருக்கின்றது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.