close
Choose your channels

போறவங்க, வர்றவங்க எல்லாம் என்னை கலாய்க்குறாங்களே: ஷிவானி புலம்பல்

Friday, November 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கை சரியாக விளையாடாத பாலாஜி மற்றும் சுசி ஆகிய இருவரும் இன்று சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சிறைக்குள் பாலாஜி இருப்பது அவரை விட ஷிவானிக்குத்தான் பெரும் சோகமாக இருந்தது. தனியாக பலூன் மீது எதையோ எழுதி கொண்டிருக்கின்றார். இதுகுறித்த காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளது

ஏற்கனவே பாலாஜி-ஷிவானி காதலை கலாய்த்த ரம்யா மற்றும் சம்யுக்தா, இப்போது ஷிவானி முன்பே நேரடியாகவே கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஒருநாள் முழுவதும் நீ எப்படித்தான் தனியா இருக்க போறியோ என சம்யுக்தாவும், இனிமேல் நீங்கள் எங்க கூட அதிகமா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் என்று ரம்யாவும் மாறி மாறி கலாய்க்க, ‘போறவங்க வர்றவங்க எல்லாம் என்னை கலாய்க்கிறாங்க’ என ஷிவானி புலம்பும் காட்சி உள்ளது

முன்னதாக சிறைக்கு உள்ளே பாலாஜியும் சிறைக்கு வெளியே ஷிவானியும் நின்று கொண்டு இருவரும் காதல் பார்வை பார்க்கும் காட்சிகளும் அதற்கேற்ற பின்னணி இசையும் இந்த புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.