close
Choose your channels

கேப்டன் சம்யுக்தாவை கூப்பிட்டு வார்னிங் செய்த பிக்பாஸ்! என்ன காரணம்?

Thursday, November 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டை சச்சரவுடன் சென்றாலும் இடையிடையே ரொமான்ஸ், நகைச்சுவை என சுவாரஸியமாக சென்று கொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பிக்பாஸ் கேப்டன் சம்யுக்தாவை கன்ஃபக்சன் அறைக்கு அழைத்து ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த பிக்பாஸ் வீட்டில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்ற விதிமுறை இருப்பதாகவும் இதை அனைத்து போட்டியாளர்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் சம்யுக்தாவிடம் பிக்பாஸ் எச்சரிக்கையுடன் கூறியுள்ளார். இதற்கு பிக்பாஸிடமும் ஆங்கிலத்தில் பதில் கூறிய சம்யுக்தா பின்னர் ஒருவராறு சமாளிக்கின்றார்.

அதன்பின் வெளியே வரும் சம்யுக்தா, ‘போட்டியாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசக் கூடாது என்றும் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பதை தமிழில் அவர் தட்டுத்தடுமாறி கூறுவதும், ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் என்ன? என்று அவர் அருகில் இருப்பவரிடம் கேட்டு கேட்டுக் கூறுவதும் மிகப்பெரிய காமெடியாக உள்ளது.

இந்த சீசன் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் ஒரு சிலரைத் தவிர போட்டியாளர்கள் அனைவருமே ஆங்கிலத்தில் தான் அதிகம் பேசுகிறார்கள் என்பதும், இது தமிழ் நிகழ்ச்சியா? என பலமுறை சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமேலாவது போட்டியாளர்கள் தமிழில் பேச முயற்சிப்பார்களா? பார்க்கலாம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.