close
Choose your channels

என்னை பத்தி யாரு தப்பா சொன்னாலும் நம்பாதிங்க: அம்மாவிடம் ஷிவானி!

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று வைக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் போட்டியாளர்கள் தீபாவளி அன்று தாங்கள் யாரை மிஸ் செய்கிறோம் என்பது குறித்து ஒரு கடிதம் எழுத பிக்பாஸ் தெரிவித்திருந்தார்

இதனை அடுத்து அனைவரும் தங்கள் குடும்பத்திலுள்ள நபருக்கும் கடிதம் எழுதினார்கள். பெரும்பாலும் அம்மா, கணவர் மற்றும் மனைவிக்கு போட்டியாளர்கள் கடிதம் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு சிலரின் கடிதம் குறித்த காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் வழக்கம்போல் ஷிவானியின் காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் ஷிவானி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதம் குறித்த காட்சிகள் அன்சீன் வீடியோவாக வெளிவந்து வைரலாகி வருகிறது

ஷிவானி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் ’ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் இருப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே என்னை பற்றி ஏதாவது நெகட்டிவ் கமெண்ட் வந்தாலும், யாராது தப்பாக சொன்னாலும் தயவுசெய்து நம்ப வேண்டாம். நான் வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன்’ என்று ஷிவானி தனது அம்மாவுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் குறித்த காட்சிகள் உள்ளன

ஷிவானி கூறியது போலவே கடந்த மூன்று சீசன்களில் ஒருசில காதல் புனிதமானது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தென்பட்டாலும் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே சென்றதும் அந்த காதல் கானல்நீர் போல மறைந்து போனதை பார்த்து வருகிறோம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.