close
Choose your channels

ஆட்டம் போடும் நிரூப்பை அடுத்த வாரம் வச்சு செய்வாரா பாவனி?

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஐந்து காயின்கள் ஐந்து போட்டியாளர்களிடம் இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு காயினுக்கு சக்தி வழங்கப்படும் நிலையில் அந்த காயின் வைத்திருப்பவர்கள். வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து வரும் காட்சிகளை பார்த்து வருகிறோம்.

கடந்தவாரம் இசைவாணிக்கு கூடுதல் சக்தி கிடைத்த நிலையில் இந்த வாரம் நிரூப் அந்த சக்தியை கையில் எடுத்து போட்டியாளர்களை ஆட்டுவித்து வருகிறார். அந்த வகையில் இன்றைய முதல் புரோமோ தனக்குரிய சக்தியை உபயோகிப்பது குறித்து நிரூபுக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

தூங்காத ஆட்களை வெளியே தூங்க செய்யலாம் என பாவனி கூற அதற்கு நிரூப், ‘நீ அதை வெளியில் போய் ரீசன் சொல்லிட்டு தூங்க வச்சுக்கோ, தூங்க வைப்பதற்கு ரீசன் சொல்லணும்ன்னு பிக்பாஸ் சொல்லியிருக்காரு என கூறுகிறார். அதற்கு பாவனி ‘ரீசன் சொல்லுங்க சார்’ என கூற மீண்டும் பாவனியுடன் வாக்குவாதம் செய்கிறார் நிரூப்.

இந்தநிலையில் பாவனியிடமும் ஒரு காயின் இருப்பதால் அவருடைய முறை வரும்போது நிரூப்பை வச்சு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காயின் உள்ள போட்டியாளர்களிடம் மட்டும் நிரூப் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது என ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.