close
Choose your channels

என் அளவுக்கு அவங்களுக்கு தைரியம் இல்லை: தாமரை கூறியது யாரை?

Sunday, December 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என் அளவுக்கு தைரியம் அவருக்கு இல்லை என தாமரை தனது பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போட்டியாளர் குறித்து கூறியதுடன் கமல்ஹாசன் ’தெளிவாக அடித்து விட்டார்’ என கமெண்ட் அடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இரண்டு இரண்டு பேர்களாக உட்காருங்கள் என கமல்ஹாசன் கூறுகிறார். அதன்பிறகு, ’எனக்கு ஏன் ஓட்டு போடவேண்டும், இவருக்கு ஏன் ஓட்டு போடக் கூடாது என்பதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் கூறுங்கள் என கமல்ஹாசன் கூறுகிறார்.

இதனையடுத்து சிபியுடன் உட்கார்ந்து இருக்கும் நிரூப் கூறும்போது, ‘என்னை பொருத்தவரை இவர் இன்னும் கேமுக்குள்ளேயே வரவில்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறுகிறார். அதேபோல் அமீருடன் உட்கார்ந்து இருக்கும் வருண், ‘இவருக்கு காலில் பட்ட அடியே அவருடைய கவனக்குறைவால் தான் என்று நான் சொல்வேன் என்று கூறுகிறார்.

அதே போல் பாவனியுடன் உட்கார்ந்து இருக்கும் தாமரை, ‘என் அளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார். அதேபோல் ராஜூவுடன் உட்கார்ந்து இருக்கும் அக்சரா கூறியபோது, ‘ராஜூ அண்ணாவுக்கு ஏன் ஓட்டு போட வேண்டாம் என சொல்வதற்கு என்னிடம் காரணம் இல்லை, ஆனால் அதே நேரத்தில் ராஜூ வின் பண்ணினால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் எனக்கு ஓட்டு கண்டிப்பாக போடுங்கள்’ என்று கூறுகிறார்.

இதே போல் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.