close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியர் இவர்தான்.. நிம்மதி அடைந்த பெண் போட்டியாளர்கள்!

Saturday, October 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் போனவாரம் சாந்தி வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் அசல் கோலார் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று இருந்ததால் அவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் நாம் எதிர்பார்த்தது போலவே இந்த வாரம் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் வீட்டிலுள்ள பெண் போட்டியாளர் அனைவரிடமும் சில்மிஷம் செய்து பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்ததால் அவர் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து அசீம் தான் முதலில் வெளியேற்றப் பட வேண்டியவர் என்றாலும் அவருக்கு முன்பாகவே வெளியேற்றப்பட வேண்டியவர் அசல் கோலார் என்று பார்வையாளர்கள் முடிவு செய்துவிட்டதால் அவர் இந்த வாரம் வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் மாடல் அழகி நிவாஷினியுடன் நெருக்கமாக இருந்த அசல் கோலார் மற்ற பெண் போட்டியாளர்களிடமும் தனது லீலைகளை காண்பித்து வந்தார். இந்த நிலையில் நிவாஷினி தவிர மற்ற அனைத்து பெண் போட்டியாளர்களும் அசல் கோலார் வெளியேறி இருப்பதை கண்டு நிம்மதி அடைந்து இருப்பார்கள் என தெரிகிறது. இதனை அடுத்து நிவாஷினியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.