close
Choose your channels

மனைவி பிறந்த நாளில் கேக் ஊட்டிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்!

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரி என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியால் ஆரியின் இமேஜ் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்பதும் அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆரி தற்போது அலேகா’, ’பகவான்’ மற்றும் ’எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சமீபத்தில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆரி தனது மனைவி நதியாவின் பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியதை அடுத்து இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக என் மனைவி நதியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அந்த போஸ்ட்டில் கூறியுள்ளார்.

மேலும் மனைவிக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தையும், மனைவி அவருக்கு கேக் ஊட்டும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். மேலும் நண்பர்கள் மற்றும் குழந்தைகளுடன் மனைவியின் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெண்ணான நதியாவை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி ஆரி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ரியா என்ற குழந்தை உள்ளார் என்பதும் இந்த குழந்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அனைவர் மனதையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.