close
Choose your channels

சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகிறது: பிரபல பாஜக பிரமுகர்

Monday, July 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு கல்வி நிகழ்ச்சியில் சூர்யா மிக அரிதாக கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து அவர் காட்டமாக விமர்சனம் செய்ததோடு, நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில், அந்த மாணவர்களால் எப்படி நீட் தேர்வுக்கு தயாராக முடியும் என்று கேள்வி எழுப்பிய சூர்யா, மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றும், அந்த கல்விக்கொள்கையை அனைவரும் படித்து அதில் உள்ள பாதகமாக விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

சூர்யாவின் இந்த பேச்சை அரசியல் தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும், கல்வியாளர்களும், சமூக வலைத்தளப்பயனாளிகளும் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.